Saturday 27 August 2011

தந்தை



கவிஞர் பால இளங்கோவன்
ஞானம் தந்திடும் பிதாவை வணங்குவதால்
 ஞாலம் நம்மை வாழ்த்துமே.
தந்தையின் சொற்படி நடப்பதால் அவரின்
 சிந்தை என்றும் குளிருமே.
விந்தைகள் பலவற்றை வாழ்வினில் நிகழ்த்த
 தந்தையின் அருளாசி வேண்டுமே.
அப்பாவின் ஆசிப்படி நடப்பதை விடுத்து
 தப்பாக நடந்திடல் கூடாது.
ஞாலம் நம்மை என்றும் போற்றிட
 பாலமாக இருப்பவர் தந்தையே.

No comments:

Post a Comment