Saturday 27 August 2011

தந்தை



கவிஞர் பால இளங்கோவன்
ஞானம் தந்திடும் பிதாவை வணங்குவதால்
 ஞாலம் நம்மை வாழ்த்துமே.
தந்தையின் சொற்படி நடப்பதால் அவரின்
 சிந்தை என்றும் குளிருமே.
விந்தைகள் பலவற்றை வாழ்வினில் நிகழ்த்த
 தந்தையின் அருளாசி வேண்டுமே.
அப்பாவின் ஆசிப்படி நடப்பதை விடுத்து
 தப்பாக நடந்திடல் கூடாது.
ஞாலம் நம்மை என்றும் போற்றிட
 பாலமாக இருப்பவர் தந்தையே.

குடும்ப தலைவி



சுஜா தாமு
திருமணமானதும் மாறியது
எனக்கு பிடித்தமான வண்ணங்கள்,
உணவுகள், ஆசைகள் கணவரது
என்னங்களுகேற்றபடி.....
கணவருக்காக காட்டன் புடவையும்
பிள்ளைகளுக்காக நாகரீக உடைகளும்
மாற்றி கொண்டதில் மறைந்தே போனது
எனது பட்டு புடவை மோகங்கள்......
கணவரது உறவினர்களையும்
பிள்ளைகளது தோழர் தோழிகளையும்
நேசிக்கும் பொழுதினில் நினைத்து
பார்க்கிறேன் தொலைந்து போன எனது
சொந்தங்களையும் தோழிகளையும்.......
பிள்ளையின் அலைபேசி அவனுக்காகவும்
பெண்ணுடைய அலைபேசி அவள் சொந்தமாகவும்
கணவர் அலைபேசி அவரது நண்பர்களுக்காகவும்
ஆகி போனதில் எனது அலைபேசி மட்டும்
பொதுவானது எனக்கெதுவும் அந்தரங்கம்
இல்லையென கூறி.......
கணவரது விருப்பதிற்காக அவர்
உறவினர் வீடுகளுக்கும்
பிள்ளைகள் விருப்பதிற்காக குளிர்
பிரதேசமும் பயணப்பட்டு களைத்ததில்
நிறைவேறாமல் போனது எனது அருவியில்
நனையும் ஆசைகள்.....
அலுவலகத்தில் கணவரும்
கணினி முன் பிள்ளையும்
தொலைக்காட்சி பெட்டியின் முன் மகளும்
முடங்கி போனதால் அடுப்படியே
உலகமாகி போனது எனக்கு........
கடலில் இட்ட பெருங்காயமாய்
என் கனவுகளை குடும்பத்தில் தொலைத்து
'நான்' என்ற சுயத்தை தொலைத்து பெற்றதோர்
பெயர் 'அருமையான குடும்ப தலைவி'

அன்னை



கிருஷ்ணா
மழையில் நனைந்த மகனுக்காய்
மழையை திட்டும் அந்த கவிதையில்
வரும் அன்னையல்ல அவள் நிச்சயமாய்...
மழையும் நானும் தோழர்கள் என
அவளுக்கு தெரியும்...
குடைகள் எனக்கு பழக்கம் இல்லை என
அவளுக்கு புரியும்...
மதிப்பெண்கள் அவளுக்கு பெரிதில்லை
மதிப்பு தான் பெரிது...
என் தோல்விகளை அவள் பெரிதுப்படுத்துவதில்லை...
என் வெற்றிகளை அவள் விமர்சிப்பதுமில்லை...
அன்னையாய் இருப்பதில்
அவள் ஒரு இலக்கணம்...
என சொல்வதில்
எனக்குண்டு தலைக்கணம்......

முதியோர் இல்லம்!



கவித்துவா (எ) பிரகல்யா
விழுதுகள் விரட்டி அடித்ததால் ...
ஆல மரங்கள் அடைக்கலம் புகுந்தன!!

ஒரு பெண்ணின் கதை


இனியவள் தமிழ்மொழி, பஹ்ரைன்
கல்லாய் இருந்திருந்தால்
சிற்பியின் கைப்பட்டு சிலையாய் மாறியிருப்பேன்
கனியாய் இருந்திருந்தால்
காக்கை, குருவிகளின் பசியாற்றிருப்பேன்
ஏன் பெண்ணாய் பிறந்தேன்.
எனை சுற்றி உள்ள உலகத்தை
சுதந்திரமாக பார்க்கமுடியவில்லை
என் எண்ணத்தை
வெளிப்படையாக சொல்ல முடியவில்லை
விழிகளுக்கு மட்டும் திரைபோடவில்லை
வாழ்க்கைக்கே திரைபோட்டு வைத்தனர்
பெண் என்று சொல்லி.
அதிகம் சிரிக்கக்கூடாது
அதிகம் பேசக்கூடாது
அதிகம் உறங்கக்கூடாது
அன்னார்ந்து படுக்கக்கூடாது.
கண்மை வைக்கக்கூடாது
கண்ணாடி முன்னே நிற்கக்கூடாது
கால்கொலுசு அதிகம் சிணுங்கக்கூடாது
கைவளையல் அதிகம் குலுங்கக்கூடாது
பூமியை பார்த்தே நடக்கவேண்டும்
அடுத்தவர் வீட்டுக்கு போகும் பெண்
அடக்கமாய் இரு.
அடுத்தவர் வீட்டுக்கு போனபிறகு
"எங்கிருந்தோ வந்தவள்"
"நேற்று வந்தவள்"
பெண் என்று சொல்லியே
அடக்கப்பட்டேன்
பெண் என்று சொல்லியே
ஒடுக்கப்பட்டேன்.
மோகப்பொருளாகவே
பார்க்கப்பட்டு
மோகப்பொருளாகவே
வளர்க்கப்பட்டு
மோகப்பொருளாகவே
வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்.
வாழ்வை நான் வாழவில்லை
என் வாழ்வையும் சேர்த்து
யார் யாரோ வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்
ஏதேதோ உறவைச்சொல்லி.

Friday 26 August 2011

Support Anna Hazare

Anna Hazare says bring back the Black Money.Do u know what will happen if  Rs. 11,456 Lac Crores comes back.  
1 )  India Financialy No.1  
 2 )  Each district will get 60000 crores.1 & 1 village will get 100 Crores  
3 ) No need to pay taxes for next 20 yrs.   4 ) Petrol 25 Rs,19 RsDiesel ,15 Rs,Milk    
5 )  No need to pay electricity bill.  
6 )  Indian borders will become more stronger than the China Wall.  
 7 )  1500 Oxford like Universitis can be opened.  
  8 )  28,000 kms Rubber road (like in Paris) can be made.  
 9 )  2,000 hospitals (with all facilities) all medicine Free.  
10 )  95 crore people will have their own house.