இரவில்
கடிகார ஓசையையும்,
சுவர் பல்லிகளின் சத்தத்தையும்,
தூரத்தில் குறி சொல்ல வந்திருக்கும்
சாமக்கோடங்கியின் ஓசையையும்
உள்வாங்கிக்கொண்டே
ஆளரவமற்ற அந்திஜாமத்தில்
விழித்திருக்கும் உன் நினைவுகளோடு
தனித்திருக்கிறேன்
நான் …
கடிகார ஓசையையும்,
சுவர் பல்லிகளின் சத்தத்தையும்,
தூரத்தில் குறி சொல்ல வந்திருக்கும்
சாமக்கோடங்கியின் ஓசையையும்
உள்வாங்கிக்கொண்டே
ஆளரவமற்ற அந்திஜாமத்தில்
விழித்திருக்கும் உன் நினைவுகளோடு
தனித்திருக்கிறேன்
நான் …
தொலைவில் இருந்துவரும்
அமானுஷ்ய சத்தத்தில்,
இதயத்துடிப்பு நிற்கும் அளவு
பயம் கவ்வி இழுக்க,
உள்ளிருக்கும் பயத்தை
வெளிக்காட்ட வகையில்
என்னை மீட்டெடுக்கிறேன்
உன்னை பற்றிய நினைவுகளிருந்து…
அமானுஷ்ய சத்தத்தில்,
இதயத்துடிப்பு நிற்கும் அளவு
பயம் கவ்வி இழுக்க,
உள்ளிருக்கும் பயத்தை
வெளிக்காட்ட வகையில்
என்னை மீட்டெடுக்கிறேன்
உன்னை பற்றிய நினைவுகளிருந்து…
இந்த அடர்ந்த பயம் கக்கும்
இருட்டில் ஆறுதல் என்னவோ
நிலவு மட்டும் தான்…
என்னைப் போல
இரவுகளில் அதுவும்
தனித்திருப்பதால்…
இருட்டில் ஆறுதல் என்னவோ
நிலவு மட்டும் தான்…
என்னைப் போல
இரவுகளில் அதுவும்
தனித்திருப்பதால்…
மெல்ல மெல்ல இரவின் மடியில்
இருந்து இறங்கும் நிலவுக் குழந்தை
உறங்கிப் போக,
எல்லோரும் விழிக்க
தொடங்கும் போது
உறங்கிப் போகிறேன்
நான்…
இருந்து இறங்கும் நிலவுக் குழந்தை
உறங்கிப் போக,
எல்லோரும் விழிக்க
தொடங்கும் போது
உறங்கிப் போகிறேன்
நான்…
No comments:
Post a Comment