Thursday 24 November 2011

அடைமழைக் காதல்


( பதிவுலகில் தொடர்பதிவு என்பது பரிட்சயம். இங்கு நண்பர்களாகிய சௌந்தர்,நான்,கூர்மதியன்  ஆகிய மூவரும் ஒரு முயற்சி செய்திருக்கிறோம ஒரே தலைப்பை எடுத்து யார் என்ன எழுதபோகிறோம் என்று சொல்லிக்கொள்ளாமல் தங்கள் மனதுக்கு படும் கதை,கவிதை,கட்டூரை என்று எதுவாக வேண்டுமானாலும் வடிவமைக்கலாம் என்று முடிவு செய்து எழுத ஆரம்பித்தோம். இதன் படி ”அடைமழை காதல்” என்னும் தலைப்பில் எங்கள் கண்ணோட்டத்தில் பதிவு எழுத ஆரம்பித்தோம். அதன்படி கீழே தொடர்வது என்பதிவு..!அவர்கள் பதிவை அவர்களில் பெயரில் சொடுக்கி பார்த்துக் கொள்ளவும்….வழக்கம் போல இந்த பதிவு உங்கள் பார்வை பயணத்தில்……)
             காதல் உச்சரித்த  மாத்திரத்தில், உள்ளுக்குள் உயிர் பூக்கச்செய்யும் என்ற பலர் சொல்லி கேட்டதை அன்றே உணர்ந்தேன்….மாலையில் ஒரு மழை நாளில், குடைக்குள் இடம் கேட்டவனை அனுமதித்தேன்…பார்த்த மாத்திரத்தில் சொக்கி நின்றேன் அவன் விழி மந்திரத்தில் ..அவன் முதல் பார்வையிலே முற்றும் துறந்த என் காதலனாய் என்னுள் நுழைந்தான்..மழைக்கு நன்றி சொல்வதா?, இல்லை மழையில் நனையாமல் இருக்க குடை கொடுத்த  என் தோழிக்கு  நன்றி சொல்வதா? இல்லை தயங்காமல் என் அருகில் வந்து, குடைக்குள் இடம் கேட்டு, எனக்குள் காதல் மழை பொலியச் செய்த இவனுக்கு நன்றி சொல்லவா?, என்ற புரியா சந்தோஷத்தில் ஹார்மோன்கள் யுத்தம் செய்யயிலே, வந்தவன் அமைதி கலைத்தான், ஹலோ ஸ்வேதா  என்று…..
என் பெயர் இவனுக்கு எப்படி தெரியும் என்பதை விட, என் பெயர் இத்தனை அழகா என்று உள்ளுக்குள் உரைத்துக் கொண்டு, பொய்யாய் ஒரு கோவப் பார்வை அவனை பார்த்தேன்..என் பார்வையில் தாக்கத்தை உணர்ந்தவன் 
சாரி ஐ ஆம் விஷ்வாஸ்…..
ஐ ஆம் வொர்கிங் அஸ் அ சாப்ட்வேர் என்ஜினீயர்,
பை தி வே,நான் நீங்க இருக்கும் அதே ஏரியாலதான், உங்க வீட்டுக்கு எதுத்த வீட்டுல குடிவந்திருக்கோம்..   ஐ நோ you வெரி வெல்,எங்க  அம்மா உங்கள பத்தி சொல்லிட்டே இருப்பாங்க என்ன அடுக்க அடுக்க அதிர்ச்சி கொடுத்து  பேசிக்கொண்டே போனவனை, கண்கொட்டமால் பார்த்துக் கொண்டிருந்தது உள்ளிருக்கும் காதல்….  
உள்மனது அவனறியாமல் என்னிடம் உரையாடியது, அறிவு கெட்டவளே, இவ்ளோ நாள் இவன எப்படி டி மிஸ் பண்ணுன…. ஹி இஸ் டூ ஸ்மார்ட்…ஹலோ ஸ்வேதா கேன் யூ ஹியர் மீ, என்று இடைமரித்தவனை …..  
என்ன என்று கேள்வி கேட்பதைப் போல பார்த்தேன்…. உங்க வீடு வந்திருச்சு, தேங்க்ஸ் பார் யுவர் ஹெல்ப், என்று என் பதிலுக்கு காத்திராமல் அவன் இல்லம் நுழைந்தான்…நானோ இருப்பு கொள்ளாமல், அவன் உருவம் மறையும் கடைசி புள்ளிக்காய் காத்திருத்தேன் ..ஐயோ எப்படி மறந்தேன் என் வீடு வந்தது கூட  தெரியமால், ஒரே பார்வையில என்ன ஆச்சு எனக்கு …என்ன அவன் என்ன நினச்சிருப்பான்…என்னடி ஸ்வேதா மொதோ பார்வையிலே ஸ்பாட் அவுட் அகிட்டயேடி…போச்சு உன்ன அவன் தப்பா நினச்சிருப்பான்..
வெளியில் குடைக்குள் ஒரு போராட்டம்  அவன் தனியே என்னை விட்டு சென்றதில் இருந்து….என்னடி எதுவும் நேத்திக் கடனா?…பக்கத்துக்கு வீட்டு மாமி கேட்கையிலே உணர்ந்தேன்..மழை விட்டு வெகுநேரம் ஆகியிருந்ததை..பதிலுக்கு சிரித்து விட்டு, பதில் வருவதற்குள் வீட்டுக்குள் சென்றேன்…மழையில் நனைந்த உடைகளை உலர்த்த முடிவு செய்து ஜன்னலின் கதவுகளை திறந்துவிட்டேன்… மணலோடு வந்த மழை  வாசம் மறுபடியும் அவன் நினைவுகளை விதைத்து சென்றது..
எப்படி நிகழ்ந்தது 
என்று யோசிக்கும் முன்னே,
பலர்க்கு காதல்
அரங்கேறி விடும்…
என் காதலும் அப்படித்தான்..
கனவுகளில் இருந்தவளை மீட்டெடுத்தது அந்த குறும்செய்தி,
வாட் யு டூயிங் ஸ்வேதா?
யார் நம்பர் என்று குழம்பிக் கொண்டிருக்கையிலே,
ஐ ஆம் விஸ்வாஸ்…திஸ் இஸ் மை நம்பர்…
இன்றே முளைத்த என் காதலுக்கு இத்தனை வலிமையா, மனதில் அவன் அலைபேசி என் வாங்கி இருந்திருக்கலாம் என்ற எண்ணம் இத்தனை வலிமை கொண்டு, அவனிடம் என் நினைவை சேர்த்ததா?….
இருப்பினும் சுதாரித்து, பதில் செய்தி அனுப்பினேன்…
என் நம்பர் உனக்கு எப்படி தெரியும்னு?
தெரியும்…..என்று பதில் வந்தது….
கொஞ்சம் இடைவெளி விட்டு அமைதி காத்தேன்…என்ன நடந்தது?…யார் இவன்?…எதற்கு என் மனது இவனை தேடுகிறது?…பார்த்த மாத்திரத்தில் காதல் வந்துவிடுமா?… ஒருவேளை இவன் அழகனாய் இருப்பதால் எனக்கு இவன் மீது காதல் வந்ததா?…இல்லை முதல் பார்வையிலே இவன் மீது காதல் வந்ததால் அழகாய் தெரிகிறானா?…எதற்கும் பொறுமையாய்  இரு ஸ்வேதா என்ன உள்மனம் எரிச்சரிக்க, பதில் அனுப்பாமல் உறங்கிப்போனேன்…
பொழுது விடிந்தது, அலுவலகம் செல்ல ஆயத்தமாகி கொண்டு இருந்த நேரம். இன்று ஒப்பனைகள் இட்டுக் கொள்ளாமலே, காதலால் சிவந்திருந்தது கன்னம்…வழக்கமாய் உதட்டோரம் ஒட்டி இருக்கும் புன்னைகையில் வழக்கத்திற்கு மாறாய், வெட்கம் ஒட்டி இருந்தது…வாசல் வந்து நின்று, அவன் வரவை உறுதி செய்தேன், என் வருகைக்காய் காத்திருந்தவன் போல, என்னோடு அவனும் சேர்ந்து வந்தான்….
விஸ்வா : குட் மார்னிங் ஸ்வேதா…
ஸ்வேதா: குட் மார்னிங் விஸ்வா….
விஸ்வா : என் பேரு இவ்ளோ அழகுன்னு நீ என் பேர சொல்லும் போது தான் தெரியுது ஸ்வேதா…
ஸ்வேதா: (நம்ம மனசுல நினச்சத இவனும் அப்படியே சொல்லுறானே!!!) அப்படிலாம் இல்ல உங்க பேரு நெஜமாவே அழகா இருக்கு…
விஸ்வா : அழகு பெண்கள்,
உதடுச் சாயத்தோடு
பொய்யையும் சேர்த்தே
பூசி இருப்பார்களாம்….
ஸ்வேதா: அப்படியா?
விஸ்வா : ம்ம்…
ஸ்வேதா: சரி நீ…. இல்ல ஒன்னும் இல்ல,
விஸ்வா : என்ன சொல்ல வந்த சொல்லு.
.
ஸ்வேதா:இல்ல ஒன்னும் இல்ல,
விஸ்வா : சரி நானே  சொல்லுறேன்… ஐ லவ் யூ ஸ்வேதா..
ஸ்வேதா : (மனசில் இருப்பதை கண்டறிந்து விட்டானோ என்ற பயத்தோடு ) விஸ்வா உங்கள எனக்கு நேத்து தான் தெரியும்…அதுக்குள்ளே இப்படி பிரப்போஸ் பண்ணுறது உங்களுக்கு சரியா இருக்கா?….
விஸ்வா : என்ன உனக்கு நேத்து தான் தெரியும், ஆனா உன்ன நான் இங்க வந்த ஆறு மாதமாவே தெரியும்….முதல் பார்வையிலே காதல் வரும்ன்னு, என் நண்பர்கள்  சொல்லி கேள்விப்பட்டு இருக்கேன், ஆனா அத மொத மொத உணர்ந்தேன் உன்ன பார்த்தவுடனேயே, என் மனசுக்குள்ள காதலா வந்துட்ட ஸ்வேதா…
ஸ்வேதா: (நம்மப் போலவே நினைகிறானே, நம் காதலன் என மனதுக்குள் சிரித்துக் கொள்கிறாள்…) சாரி எனக்கு உங்க மேல அப்படி எந்த எண்ணமும் இல்லை விஸ்வாஸ்… பாய் ஐ ஆம் மூவிங் நொவ்…
அவன் ஏக்கமாய் பார்ப்பதை கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன்… அலுவலக பணிகள் ஒன்றும் செய்யமுடியவில்லை…கோப்புகள் அனைத்திலும் அவன் ஏக்கப் பார்வையே என்னை ஆட்டிப் படைத்தது…அலுவலக நண்பர்கள் அந்நியமாய் தெரிந்தனர்…. அலுவலக நாட்காட்டி, ஒவ்வொரு நிமிடத்திலும், நெருப்பள்ளி போடுவாதாய் ஒரு எரிச்சல்…அவன் குரல் கேட்க நினைத்து, அவனை தொடர்பு கொண்டேன்…
அவன் இணைப்பு கிடைக்கமால், இருதயம் இடமாறித் துடிக்க, இரண்டே நாளில் நான் மாறிப் போனதை எண்ணி, வெட்கம் தான் வந்தது…
காதல் ஒரு
அழகான திருட்டு,
எப்போது
களவாடினோம்,
எங்கே களவாடப்பட்டோம்
என்று தெரியாமலே,
இதயங்களை தொலைக்க வைக்கும்…
கண நேரக் கனவை கலைத்தது, அந்த அழைப்பு, அவன் தான் அவனே தான்…மனது பட்டாம் பூச்சியாய் படப்படத்தது…இரு கைகளும் சிறகுகளாய் வானில் விரித்து பறக்கவைத்தது….
ஹலோ ஸ்வேதா,
ஹாய் விஸ்வா
இம்ம்..சாரி ஸ்வேதா உங்கிட்ட பேசாம இருக்க முடியல, எந்த வேலையும் செய்ய முடியல, இன்னைக்கு சாயங்கலாம், உன் ஆபீஸ் பக்கத்துல இருக்கிற பீச்க்கு வரையா?
வேண்டாம் என்று தொண்டைவரை சண்டையிட்ட வார்த்தை, வெளிவரும் போது காதலாய், சரி வரேன் என்று பதில் சொன்னது அவனிடம்…
ஓகே பாய் ஸ்வேதா… ஐ ஆம் வைட்டிங் பார் யூ… பாய் நொவ்…
இணைப்பை துண்டித்தாலும், இன்னும் இருதயத் துடிப்பு வேகத்தைக் குறைக்கவில்லை… கண்கள் ஒவ்வொரு நிமிடமும், கடிகாரத்தோடு சண்டை இட்டுச் சென்றது…
அலுவலகம் முடிந்தது, என்னையும் அறியாமல் கால்கள், அவன் இருக்கும் திசை நோக்கி விரைந்து சென்றது…எப்போதும் ஒப்பனைகள் பூசிக்கொண்ட முகம், இன்று வெட்கங்களை அள்ளி பூசிச் சென்றது…
காதலிக்க தொடங்கும்
பலருக்கும்,
கவிதை வந்துவிடுகிறது…
உன்னை பற்றி
எழுதுகையில்,
என் எழுத்துக்கும்
காதல் வந்துவிடுகிறது
அவ்வளவு அழகு நீ…
கடல் ஓசை நடுவே, அமைதியாய் கடல் மணலில் விரல் பதித்து விளையாடும் குழந்தையாய், அழகாய் அமர்ந்திருந்தான். அவன்அருகில் சென்றேன்…என்னை பார்த்ததும், படப்படத்த அவன் விழிகள் பார்த்து கிறங்கி நின்றது என் காதல்…
ஸ்வேதா, நான் உன்ன விரும்புறேன், நீ இல்லாத ஒரு வாழ்க்கையை நான் நினைக்க விரும்பல, என் மேல நம்பிக்கை இல்லாட்டி, எப்போ என்ன பிடிக்குதோ அப்போ என் கிட்ட உன் காதல சொல்லு, மறு நிமிசமே உன்ன என் அம்மா முன்னாடி, அவங்க சம்மதத்தோட  என் மனைவியா ஏத்துக்கிறேன்….
இவனை பார்பதற்கு முன் ஒத்திகை பார்த்து கையேடு எடுத்து வந்த வார்த்தைகள், பேசப்படாமையே இருந்தன இந்த சந்திப்பில்..என்ன ஸ்வேதா ஆச்சு உனக்கு, அவன் பேசுறதுக்கு பதில் சொல்லாமையே இருக்கையே, என உள்மனம் என்னை உந்தி தள்ளியது… விஸ்வா?
சொல்லு ஸ்வேதா…..
எனக்குள்ள மாற்றம் இருக்கு,,
எனக்கு உன்ன பிடிச்சிருக்கு, ஆனாலும்,
முதல் பார்வை மோதலில் காதல் பிறக்குமா?…..
அடி பைத்தியக் காரி,
கண்கள் பேசத்
தொடங்கிவிட்டால்
அதற்க்கு பெயர்
காதல்….தெரியாதா?
இம்ம்…
எப்போதும் எனக்கு நீ இப்படித்தான்
இரட்டை குழந்தையை தான் பிரசவிப்பாயா?
என்ன சொல்ற?….
இல்ல உன் உதட்டு தழுவலில், பிரிந்து வரும் ஓசை,
இம் என்ற இந்த இரட்டை குழந்தையைத் தான் எனக்கு இதுவரை கொடுத்திருக்கு, அதான் கேட்டேன்….
புன்னகையுடன் வெட்கத்தையும் அவனுக்கு  பரிசளித்தேன்,
விஸ்வா ஐ லவ் யூ…
காதல் எத்துணை
வலிமையானது,
ஒரே நாளில்
என் அடையாளங்களை
மாற்றிப் போட்டுவிட்டதே….
இருவரும் குடைக்குள் தஞ்சமான அதே இடத்தில் இன்று காதலர்களாய் கதை பேசி நடந்தோம்…விஸ்வாஸ்  இடைமறித்து, உனக்கு என்ன என்ன பிடிக்கும் ஸ்வேதா?………………
எனக்கா, எதையும் எண்ணாம உன்னை மட்டும் எண்ணப் பிடிக்கும்…
பாருடா, நீ கூட அழகா பேசுறயே…
பின்ன அழகன் நீ என்கூட இருக்கையில, என் பேச்சு அழகா இருக்கிறதுல
என்ன அதிசியம் இருக்கு…
ஸ்வேதா, நம்ம ரொம்ப அதிஸ்டசாலிகள் இல்லையா, நம்மக்கான நம்மோட காதல் குழந்தையை இருவரும், சரியான புரிதலோட அடையாளம் கண்டுக்கிட்டோம் இல்லையா…
இம்ம்..ஆமாம் விஸ்வா..ஒரே நிமிடத்தில் எத்துணை மாற்றம்…காதலோடு சண்டையிட்டவள், இன்று உன் காதலியாய் உன் கரம் பற்றி வருகிறேன்,
நீ கண்ணுக்குத்தான் மையிட்டாய்,
என்றால்
எனக்கும் மையிட்டு
எப்படி மயக்கினாய்
உன் கதலனாக?
ஹ ஹ…
சிரிக்காத, ஸ்வேதா..
சரி, வீடு வந்துருச்சு, நீ உன் வீட்டுக்கு போ விஸ்வா,
ஹே நீ வீட்டுக்கு வா?…அம்மாகிட்ட உன்ன அறிமுகம் செய்து வைக்கிறேன்…வா
ஏன் டா, இப்படி…எத்தன நாளா எனைத் தெரியும்னு அம்மா கேட்ட என்ன சொல்லுவ?
டா வா? என்னடி கட்டிக்க போறவன டா னு சொல்லுற, இதெல்லாம் உன் அத்தைக்கு பிடிக்காது…ஒன்னு தெரியுமா ஸ்வேதா, இந்த வீட்டுக்கு குடிவந்த அன்னைக்கே, என் அம்மா உன்ன பாத்து, எனக்கு இந்த மாதிரி ஒரு மருமகள் தான் அமையணும்னு சொன்னங்க…அப்போவே உன்ன கொஞ்சம்  பிடிச்சிருச்சு…அப்பறம் அன்னைக்கு ஒரு நாள், பச்சை  சேலையில் வெளியே நீ வந்த அப்போ, வீட்டு பூக்கள் கூட்டமே, இடமாறி பூத்து விட்டோமொனு தலை கவிழ்ந்து உன்னை பார்த்தப்போ, உன் அழகு கண்டு கொஞ்சம் பிடிச்சது, அப்பறம் அன்னைக்கு ஒரு நாள் என் அம்மாவுக்கு அன்பாய் நீ இட்டு விட்ட கோவில் திருநீறில், கொழுந்து விட்டு எரிந்தது என் காதல்..
கொஞ்சம் கொஞ்சமாய்
என்னை கொள்ளை கொண்ட,
காதல் திருடி நீ…
நல்ல கவிதையா பேசுறயே….
அழகு பெண்ணே ஒரு கவிதை தான்….அதிலும் என் தேவதை நீ கூட இருக்கையில, மூச்சு காத்துக் கூட கவிபாடுது…நான் என்ன செய்ய?
.சரி என்ன உனக்கு எப்படி பிடிச்சது சொல்லேன்…
நீ தான் என்ன மொத்தமா பிடித்திருக்கயே…இதுல தனி தனியா என்னத்த சொல்ல….சரி விஸ்வா உன் அம்மா நம்ம காதல ஏத்துப் பாங்களா?
இந்த தேவதைய யாருக்குத் தான் பிடிக்காது…கண்டிப்பாக பிடிக்கும் செல்லம்…
என்னடா இங்க நடக்குது….
என்ன ஸ்வேதா இங்க வந்து இருக்க?……
அம்மா நான் ஸ்வேதா வா காதலிக்கிறேன்….
என்ன விஸ்வா சொல்லுற,
ஆமாம் ஸ்வேதா இல்லாத ஒரு வாழ்க்கைய என்னால வாழ முடியாதுமா?
நீ என்னம்மா சொல்லுற ஸ்வேதா?
எனக்கும் விஸ்வா வா பிடிசிருக்குமா?
நல்ல பசங்க, இப்போதான் ஸ்வேதா ஜாதகத்த அவங்க வீட்டுல இருந்து வாங்கிட்டு  வந்தேன்….உங்க ரெண்டுபேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறதா நாங்க முடிவு பண்ணி இருக்கோம். அதுக்குள்ளே நீங்க முந்திக்கிடேங்களா?….
அதிர்ச்சில் இருந்து மீளாத எங்களை இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறோம்….
ஒரே பார்வையில் காதல் கொண்டு, போராட்டம் இல்லாமல், காதலோடு கிடைத்த வாழ்க்கையை எண்ணி எண்ணி, சொல்லெனா மகிழ்ச்சியில் திக்கி முக்காடிக் கொண்டிருக்கிறோம்….இடையில் கல்யாண வேலைகள் ஜோராய்  நடைபெற்றுக் கொண்டிருக்க,
விடாத தூறலாய் , அவன்  காதலில் நான் நனைய,
என் காதலில் அவன் நனைய எங்களோடு சேர்ந்து நனைகிறது
எங்கள் அடைமழைக் காதல்….
முடிந்தால் எங்கள் திருமணத்திற்கு வரவும்…..உன்னை அவளோடு எதிர் பார்க்கின்றோம் மழையே…………
எப்போதும் வந்து விழும்
மழை,
இந்த முறை கொண்டு
வந்தது எனக்கான காதலை.

1 comment: